Aran Sei

தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயலை அவசர அவசரமாக ஒன்றிய அரசு நியமித்தது ஏன்?: தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

லைமைத் தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

குறுகிய காலத்தில் ஓய்வுபெறும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நியமனம் செய்கிறது – உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டியது கட்டாயம் என அரசியல் சாசனத்தின் 324 (2)-வது பிரிவு கூறுகிறது. ஆனால் அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர்.

மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் நபரை இந்தப் பதவியில் அமர்த்துகிறார்கள். எனவே தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்.

டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்தபோது யாருடைய அழுத்தத்துக்கும் பணியாமல் தன்னிச்சையாக செயல்பட்டார். பல்வேறு சீர்திருத்தங்களைத் துணிச்சலாக மேற்கொண்டார். இது போன்றவர்களைத்தான் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராகவும் யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணியாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வலிமை பெற்றவராகவும் இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அவசர அவசரமாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? – ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

இதற்கு முன்னதாக, அருண் கோயலை தேர்தல் ஆணையராக மின்னல் வேகத்தில் நியமிக்க வேண்டிய அவசியமென்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

“ஒன்றிய அரசுக்கு அப்படியான அவசரம் என்ன இருந்தது. மே 15-ஆம் தேதிதான் தேர்தல் ஆணையர் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்னல் வேகத்தில் அடுத்த ஆணையருக்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி மின்னல் வேகத்தில் ஒப்புதல் அளிக்க அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.

ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லையென்றால் ஒன்றிய அரசு அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யட்டும். நாங்கள் அருண் கோயல் என்ற அதிகாரியின் திறனை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மாறாக, எதன் அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெற்றது என்பதையே கேட்கிறோம்” என்று உச்ச நீதிமன்றம் வினவியிருந்தது.

உ.பி: 581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு, எலி தின்றதாக நாடகமாடிய காவல்துறையினர்

இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போது ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வேங்கடரமணி எதிர்ப்பு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, “நீங்கள் சற்று நேரம் உங்கள் வாயை மூடிக் கொண்டு பிரச்சினையை முழுமையாக அணுகவும்” என்று காட்டமாகக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது நீதிபதிகள், “தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு எதன் அடிப்படையில் சட்ட அமைச்சர் வெறும் 4 நபர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரைத்தார்” என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த தலைமை வழக்கறிஞர், ”பணியாளர் மற்றும் அவர்களுக்கான பயிற்சி துறையின் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தேர்வு நடைபெற்றது” என்றார்.

அருண் கோயல் நியமனம்: புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து சமீபத்தில் ஒன்றிய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை, தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் ஒன்றிய அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

மேற்குவங்கம்: ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராக காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஹிஜாபிற்கு தடை விதித்த பள்ளி நிர்வாகம்

அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் நவம்பர் 18-ல் தனது பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில், மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.

Source : the indian express

ஜல்சா கட்சியின் பேக்கரி டீலிங் | (ஆ)பாசமலர் சூர்யா டைசியின் உருட்டு | Aransei Roast | Annamalaibjp

தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயலை அவசர அவசரமாக ஒன்றிய அரசு நியமித்தது ஏன்?: தேர்தல் ஆணையர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்