சென்னையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மரணம் அடைந்துள்ளதால் சிபிசிஐடி விசாரணை தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது
இது குறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஜி.சுரேஷ் (28) அவரது நண்பர் விக்னேஷ் (25) இருவரையும் கடந்த 18 ஆம் தேதி புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, மருத்துவர்கள், விக்னேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் விக்னேஷ், காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கை காரணமாக காவல் நிலையத்திலேயே இறந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சென்னை: விசாரணையின் போது வாலிபர் மரணம் – காவல் மரணமென குடும்பத்தினர் குற்றச்சாட்டு
இதுமட்டுமின்றி, விசாரணைக் கைதியின் உறவினர்கள் சுமார் 48 மணி நேரம் சட்ட விரோதமாக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய அதிகாரிகளின் இந்த அத்துமீறிய நடவடிக்கை குறித்தும், வாலிபர் விக்னேஷ் மரணம் குறித்தும், உண்மை தன்மை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******************** ************************* **********************
கொடநாடு மர்மம் அவிழப்போகும் உண்மைகள் – Race Course Ragunath Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.