Aran Sei

சாமியார் யதி நரசிங்கானந்த் கைது – பெண்களை இழிவு செய்த வழக்கில் உத்தரகண்ட் காவல்துறை நடவடிக்கை

ஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் உரையாற்றப்பட்டதாக கூறப்படும் ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட இந்து மத சாமியார் யதி நரசிங்கானந்தை உத்தரகண்ட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வழக்கானது, கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளது. உத்தரப்பிரதேச காவல்துறை யதி நரசிங்கானந்திற்கு எதிராக பிரிவு 505-1(C), 509 (பெண்ணை அவமானப்படுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 506 (மிரட்டல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (மின்னணு வடிவில் ஆபாசமானவற்றை வெளியிடுதல் அல்லது அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் மூன்று வழக்குகளை பதிவு செய்திருந்தது.

உத்தரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள தஸ்னா கோவிலின் பூசாரியான நரசிம்மானந்த், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை  ‘தர்ம சன்சத்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

தர்ம சன்சத்: ‘அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விதிகளை மீறும் செயல்’ – தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முன்னாள் கடற்படைத் தலைவர் கடிதம்

இந்நிக்ழச்சியில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய விவகாரத்தில், யதி நரசிங்கானந்த், ஜிதேந்திர தியாகி, சத்வி அன்னப்பூர்னா உள்ளிட்ட பத்து பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, ஜனவரி 14ஆம் தேதி, இவ்வழக்கில் தொடர்பாக, அண்மையில் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர தியாகி என்ற இந்து மத சாமியார் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் செய்யப்படும் முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.

இவ்விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களான யதி நரசிங்கானந்த் மற்றும் சத்வி அன்னப்பூர்னா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று(ஜனவரி 15), ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யதி நரசிங்கானந்த் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தர்ணாவில் அமர்ந்திருந்த அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் முதல் கைது: காவல்துறையினருக்கு சாபம்விட்ட யதி நரசிம்மானந்த்

இவ்வழக்கு விசாரணையின் போக்கைப் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று ஹரித்வார் காவல் கண்காணிப்பாளர் ஸ்வதந்திர குமார் கூறியுள்ளார்.

ஜிதேந்திர தியாகியை கைது செய்யும்போது, “நீங்கள் அனைவரும் செத்துப்போவீர்கள். உங்கள் குழந்தைகள் உட்பட..” என்று காவல்துறையினரை நோக்கி யதி நரசிங்கானந்த் சாபமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: PTI, The wire

சாமியார் யதி நரசிங்கானந்த் கைது – பெண்களை இழிவு செய்த வழக்கில் உத்தரகண்ட் காவல்துறை நடவடிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்