உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ,கந்தலா பகுதியில் மூன்று பெண்களுக்கு அங்குள்ள சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார நிலைய மருந்தியல் வல்லுநர்மீது விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொரனோ தடுப்பூசி செலுத்தப்பட மருத்துவமனை சென்ற நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரகாண்டில் அமலாகும் மதமாற்ற தடைச்சட்டம் – மாநில முதலமைச்சர் உறுதி
இந்நிலையில், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மருத்துவமணையில் பரிசோதித்துப் பார்த்தபோது கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
souce: the hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.