Aran Sei

உ.பி: 581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு, எலி தின்றதாக நாடகமாடிய காவல்துறையினர்

த்தரபிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டுவிட்டதாக மதுரா காவல்துறையினர் எலிகள் மீது குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சாக்கள் கடத்தல்காரர்களிடமிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

உ.பி. காவல்துறை அப்பாவிகளை கைது செய்கிறது – பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குற்றத்தை நிரூபணம் செய்து தண்டனையை அறிவிக்கப் பறிமுதல் செய்த கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சாவின் மாதிரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், நீதிமன்றம் இதை ஏற்க முடியாது பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவையும் நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரா காவல்துறையினர் நீதிமன்றத்தில் அளித்த பதில் தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மதுரா காவல்நிலைய ஸ்டோர் ரூம்மில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் சாப்பிட்டு விட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர். இதனை கேட்டு நீதிபதிகள் அதிர்ந்து போயினர். இது தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில், பறிமுதல் செய்த போதைப்பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க கூறியபோது, அதனை வேறொருவரிடத்தில் அதிக விலைக்கு விற்று விட்டு எலிகளின் மீது பழிசுமத்தியதில் விசாரணையில் அம்பலமாகியது.

உ.பி: காவல்துறையினருக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை வெளிக்கொண்டு வந்த காவலருக்கு தண்டனையாக 600 கிமீ தொலைவில் இடமாற்றம்

இதேபோல் 2017ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை பறிமுதல் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்துக் குடித்து காலி செய்துவிட்டதாகப் பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : BBC

SKY க்கும் சாம்சனுக்கும் நூல் வேணுமாம்! | சாதிவெறி BCCI இன் EWS கிரிக்கெட் | Aransei Roast

உ.பி: 581 கிலோ கஞ்சாவை விற்றுவிட்டு, எலி தின்றதாக நாடகமாடிய காவல்துறையினர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்