Aran Sei

நீதிமன்றத்துக்கு எல்லைக் கோட்டை வரையறுக்கும் அதிகாரம் ஒன்றிய சட்ட அமைச்சருக்கு இல்லை – ப.சிதம்பரம் கண்டனம்

நீதிமன்றம் அதன் எல்லையை தாண்டி வரக் கூடாது என ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான  ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களை அச்சுறுத்துவதற்காக ஆங்கிலேயேர் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவுக்குப் பதிலளித்திருந்த ஒன்றிய அரசு, தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, மறுபரிசீலனை முடிவடையும் வரையில் இந்த சட்டத்தின் கீழ் யார் மீதும் வழக்கு பதியக் கூடாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பாஜக தலைவர்கள் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

தாஜ்மகால் அமைந்திருக்கும் இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது – பாஜக எம்.பி தியா குமாரி கருத்து

அந்த வகையில், ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “நீதித்துறையையும் அதற்கு இருக்கும் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஒரு எல்லைக் கோடு இருக்கிறது. அதை அனைவரும் மதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த ப.சிதம்பரம், ” இந்திய சட்ட அமைச்சருக்குத் தன்னிச்சையான லட்சுமண ரேகையை வரைய அதிகாரம் இல்லை. அவர் அரசியலமைப்பின் 13 வது பிரிவைப் படிக்க வேண்டும்.

டெல்லி: மக்களின் எதிர்ப்புக்ளையும் மீறி வீடுகளை இடித்த பாஜக ஆளும் நகராட்சி நிர்வாகம்

அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கும் சட்டத்தை இயற்றவோ அல்லது அது மாதிரியான ஒரு சட்டத்தை நிலைத்திருக்க செய்யவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. சுதந்திரத்துக்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம், மனித உரிமைகளுக்கு எதிராக இருந்தால் அதனை செல்லாது என அறிவிக்க மேற்குறிப்பிட்ட 13-வது சட்டப்பிரிவு அனுமதி வழங்குகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான பதிவிட்டுள்ளார்.

Source: indianexpress

நீதிமன்றத்துக்கு எல்லைக் கோட்டை வரையறுக்கும் அதிகாரம் ஒன்றிய சட்ட அமைச்சருக்கு இல்லை – ப.சிதம்பரம் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்