இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வந்ததை ஒட்டி குஜராத்தின் குடிசை பகுதிகள் துணியால் மறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு முதல் முறையாக 2 நாள் பயணமாக போரிஸ் ஜான்சன் இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு போரிஸ் ஜான்சன் இன்று (ஏப்ரல் 21) வந்துள்ளார். குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத்திற்கு வருகை தந்த போது குஜராத்தின் குடிசை பகுதிகள் தெரியாதவாறு பெரிய சுவர் கட்டி மறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவை எதிர்த்திருந்தால் இளையராஜாவின் பின் தமிழ்நாடு திரண்டிருக்கும்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.