பாஜகவிற்கு எதிராக ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை பாட்னாவில் சந்தித்தார்.
பீகார் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணியை முறித்து ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து பீகாரில் மீண்டும் ஆட்சியமைத்தார் நிதிஷ்குமார். இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும், இல்லையெனில் இந்த நாட்டைக் காப்பாற்ற வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருந்தார்.
பாஜக அரசின் ‘மக்கள் விரோத’ கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சந்திரசேகர் ராவ் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : NDTV
Kallakurichi Sakthi School case latest update on bail judgement | Advocate rajini
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.