Aran Sei

சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்பதே தமிழ்நாட்டின்‌ விருப்பம் – கே.பாலகிருஷ்ணன்

ளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌ அனைத்துக் கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்‌ என முதல்வர் பேசியுள்ளார். அரசின் கொள்கை‌ உரையே‌ அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும்‌ என்பது‌ சரியான, வரவேற்க வேண்டிய முடிவு. தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத‌து. அரசியல் சாசன வரம்பினை மீறி‌ தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான‌ பதிலடி.

மு.க.ஸ்டாலின் பேசி கொண்டிருக்கும் போதே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர்: தேசிய கீதம் இசைக்கும் முன்பே ஆளுநர் வெளியேறியதற்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்

முதலமைச்சரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையிலிருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார்‌. தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார்.‌ எதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல்,‌ மிகுந்த கண்டனத்திற்குரியது.

அவையிலிருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்திலிருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ்நாட்டின்‌ விருப்பம்.‌ சட்டமன்றத்தில்‌ எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.‌ ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌,‌ அனைத்து கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும்” என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Governor RN Ravi walked out from Tamilnadu assembly against CM Stalin speech | BJP | DMK | MK Stalin

சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய ஆளுநர் தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்பதே தமிழ்நாட்டின்‌ விருப்பம் – கே.பாலகிருஷ்ணன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்