Aran Sei

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் கடிதம்

ள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனிதம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மனிதம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுதியுள்ள கடித்ததில், மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை. மிகுந்த வேதனையுடனும், கவலையுடனும் இதில் கையெழுத்திட்டுள்ள சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

கர்நாடகா: மயானத்தில் புதைக்க ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு – பட்டியல் சாதியினரின் உடல் சாலையோரம் புதைக்கப்பட்ட அவலம்

சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து போயுள்ள கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் சம்பந்தபட்ட ஐந்து எதிரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களில் (எண்கள் 20088, 20135 / 2022) 26.08.2022 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில் சொல்லப்பட்டுள்ள சில அம்சங்கள் எங்களை மிகவும் கலக்கமடையச் செய்துள்ளது.

இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்காத, சிபிசிஐடி போலீசாரின் புலன் விசாரணையில் இருந்து வருகின்ற ஒரு வழக்கில் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி இறுதி முடிவே எடுத்துள்ளார். ஜாமீன் மனு விசாரணையின்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்புகளுக்கு முரணாக இந்த உத்தரவு உள்ளது. குற்றம் தொடர்பான சாட்சி, ஆதாரங்கள் நிலை நிறுத்தப்படவில்லை என்றும், இந்த குற்றம் வன்புணர்வோ, கொலையோ அல்ல என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

கர்நாடகா: இந்துக் கடவுள் சிலையை தொட்ட பட்டியல் சமூக சிறுவன் – ரூ. 60,000 அபராதம் விதித்த ஆதிக்கச் சாதியினர்

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மாணவியால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்துக்கள் தனது மகளுடையது அல்ல என மாணவியின் தாயார் மறுத்துள்ள நிலையில், அந்த கடிதத்தை நீதிபதி ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், பள்ளியின் சுவற்றில் உள்ள ரத்தக் கறையானது பெயிண்ட்டால் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் ரத்தம் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். நீதிபதியின் இந்த முடிவுகள், தேவையற்ற கருத்துக்கள் வழக்கின் இறுதி முடிவையும், விசாரணை நீதிமன்றத்தையும், புலன் விசாரணையையும் பாதிப்படையச் செய்யும்.

ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அந்த மனுவின் நோக்க எல்லைக்கும் அப்பால் சென்று வழக்கின் தகுதியையே நீதிபதி முடிவு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி: பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இன்னும் இறுதி முடிவுக்கு உட்படுத்தப்பட்டிருக்காத பிரேத பரிசோதனை சான்றிதழ், வல்லுநரின் கருத்துக்களின் அடிப்படையில் மாண்புமிகு நீதிபதி அவர்கள் மேற்குறிப்பிட்ட முடிவை எடுத்துள்ளார். சிறுமியின் பிறப்புறுப்பை சுற்றி காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை சான்றிதழில் காணப்படவில்லை என்பதினால் வன்புணர்வு குற்றமே நடைபெறவில்லை என முடிவு செய்துள்ளார்.

பிரபலமான மதுரா வழக்கில் 1979 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் தொடர்ச்சியாக 1983 ஆம் ஆண்டு வன்புணர்வு தொடர்பான குற்றங்களில் பாராளுமன்றம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் எங்கள் கவனத்திற்கு வருகின்றது. வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் குற்றம் தொடர்பாக ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து வந்த கருத்துக்களில் 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்த அம்சங்களை நீதிபதி அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

புதுக்கோட்டையில் தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினர் – ‘அரண்செய்’ யின் கள ஆய்வு

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் மனுவில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் காரணமாக பெரும்பாலான பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தங்களது நீதிமுறையான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மாண்புமிகு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் என்ற முறையில், இறந்துபோன பள்ளி சிறுமியின் வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஏதுவாக நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திடுமாறு வேண்டுகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் கல்வியாளர்கள் வசந்திதேவி, தாவூத் மியான்கான், பிரின்ஸ் கஜேந்திர பாபு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் துணைத் தலைவர் உ.வாசுகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்.திருமாவளவன், சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை.மாலி, எம்.சின்னதுரை, எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சன்யா, மூத்த பத்திரிகையாளர் விஜய சங்கர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

என்னை சூத்திரன்னு சொன்னா கடவுளே தேவையில்ல I Sathiya Prabhu Interview I A Rasa Controversial Speech

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்