ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப் பிரிவின் விதிகளை ரத்து செய்த ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 25), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன், “ஜம்மு காஷ்மீரில் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்” என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே வாதிட்டுள்ளார்.
“நான் பார்க்கிறேன். இந்த வழக்குக்கு ஐந்து நீதிபதிகள் வேண்டும். நான் இந்த அமர்வில் மாற்றங்கள் செய்கிறேன்.” என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கோடை விடுமுறைக்குப் பிறகு, இவ்விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை மீண்டும் அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
Source: PTI
“இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது”
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.