Aran Sei

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் பாரபட்சம்: பிரச்சினை தீரும்வரை ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

ராணுவ பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படும் பிரச்சினை தீரும் வரை, அக்டோபர் மாதம் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்துமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று (டிசம்பர் 9) உத்தரவிட்டது.

ஆண் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான தேர்வு வாரியம் நடத்தப்படுகிறது. ஆனால், பெண் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க படுவதில்லை எனக் கூறி இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 34 பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இளைஞர்களின் போராட்டத்திற்கு மத்தியில் அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய ராணுவம் வெளியிட்டது: ஜூலை முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்மா அமர்வு முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.மோகனா, 2022 நவம்பரில் ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட கடிதத்தின்படி, “சுமார் 249 பெண் அதிகாரிகள் கர்னல் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும், அதிகாரிகளால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வு வாரிய SB3 மற்றும் SB2 ஆகியவற்றில் பெண் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை என்று வாதிட்டார்.

பெண் ராணுவ வீரர்கள் கீழ் பயின்ற இளையவர்கள் எல்லோரும் அதிகாரிகள் ஆக பெண்களுக்கு மட்டும் ஏன் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

பொதுமக்களை சுட்டுக் கொன்று எரித்த மியான்மர் ராணுவம் – 38 பேர் பலியானதாக தகவல்

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவ தலைமையகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் மற்றும் அட்வகேட் கர்னல் பாலசுப்ரமணியம் ஆகியோர், நிதி அமைச்சகம் சமீபத்தில் 150 காலியிடங்களுக்கு அனுமதி வழங்கியதாகவும், அதற்கான தேர்வு வாரியங்கள் 2023 ஜனவரிக்குப் பிறகு நடத்தப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதிகள் குழு “இந்த பெண் அதிகாரிகளிடம் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று நாங்கள் உணர்கிறோம். நீங்கள் உங்கள் நியமன யுக்தியை ஒழுங்கமைக்க வேண்டும். பணி என்பது அனைவருக்கும் சமம். அதில் பாலின அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது. பெண் அதிகாரிகளின் பிரச்சினை பரிசீலிக்கப்படும் வரை அக்டோபரில் நடத்தப்பட்ட SB3 இன் கீழ் பதவி உயர்வு பெற்ற ஆண் அதிகாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்துமாறு” ராணுவ அதிகாரிகளை அமர்வு கேட்டுக் கொண்டது.

தற்போதைய காலிப் பணியிடங்களுக்கு பெண் அதிகாரிகள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்றும் நீதிமன்ற அமர்வு ராணுவத்திடம் விளக்கம் கேட்டது. மேலும் இது குறித்த விசாரணை வரும் டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source : india today

ரஜினியின் சங்கி படம் பாபா | வியாபாரமாகாத ஓட்டத் தக்காளி | Aransei Roast | Rajinikanth | BJP | Baba

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் பாரபட்சம்: பிரச்சினை தீரும்வரை ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்