ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிரான மனுக்களை கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரிப்பதாக கூறியிருந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அத்தகைய மனுக்களை விசாரிப்பதற்கு எந்தவொரு நீதிமன்ற அமர்வையும் அமைக்காமல் ஓய்வு பெற்றுள்ளார் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, உமர் அப்துல்லா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிரான மனுக்களை விசாரிப்பதாக கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா எங்களை ஏமாற்றியுள்ளார்.
உச்சநீதிமன்றம் போன்ற நிறுவனங்களின் மீது மக்கள் ஏன் நம்பிக்கை இழக்கிறார்கள் என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். ஒருவேளை இது இம்மாதிரியான கடுமையான பிரச்சினைகளை கையாளும் விதத்துடன் ஏதாவது தொடர்புடையதாக இருக்கலாம் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ஒன்றிய அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
உமர் அப்துல்லாவின் கட்சி உட்பட பல முக்கிய கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கடந்த ஆகஸ்ட் 27 அன்று பதவியேற்றார்.
Source : the hindu
Kallakurichi Sakthi International School Issue | Who is the teacher? | Advocate Dhamayandhi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.