Aran Sei

‘அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி காலியா?’ – வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு.வெங்கடேசன் கேள்வி

ங்கி ஊழியர் தேர்வுக் கழக தேர்வுகளில், முதலில் செய்த நிர்வாகத் தவறை நியாயப்படுத்தவே மாற்ற மறுக்கிறார்கள் என்றும், இது தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் ஒரே நிறுவனத்தின் இரு பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்துவதை மாற்ற வேண்டுமென்று, வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு (ஐபிபிஎஸ்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருந்தார்.  பிப்ரவரி 16 ஆம் தேதியிட்ட கடிதத்தில், அக்கோரிக்கையை உள் ஆய்வுக் குழு ஒன்று பரிசீலித்ததாகவும் ஆனால், அதே தேதிகளைத் தொடர்வதாகவும் ஐபிபிஎஸ் பதில் அளித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள் தனியாருக்கு விற்பனை – வரும் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து, இன்று (பிப்பிரவரி 19) மீண்டும் ஐபிபிஎஸ்-க்கு எழுதிய கடிதத்தை சு.வெங்கடேசன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் பதில் ஏமாற்றம் அளிக்கிறது. உள் ஆய்வுக் குழு, இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்கவுள்ள தேர்வர்களின் சிரமங்களை மறுக்கவில்லை. தேர்வர்கள் தங்களின் சிரமங்களை உங்களுக்கே தெரிவித்துள்ளதையும் உங்கள் கடிதமே ஏற்றுக் கொண்டுள்ளது. ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நேர்காணலில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கக் கூடுமென்பதால், அந்த தேதியை நீங்கள் மாற்றி இருக்கலாம். மேலும் இரு தேர்வுகளுமே ஒரே தொழில் சார்ந்தவை. முடிவெடுத்தலும் ஒரே கூரையின் கீழ் இருக்கிறது. இருப்பினும் தேர்வர்கள் ஏதாவது ஒரு வாய்ப்பை நழுவ விடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது ஏன்? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது அந்த தேர்வர்களில் சிலருக்கு வாழ் நாள் வாய்ப்பை இழக்கச் செய்வதாகக் கூட அமைந்து விடம்” என்று சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

” கடன் வழங்குவதில் முறைகேடு செய்தார் ” – தனியார் வங்கி ஐசிஐசிஐயின் சந்தா கொச்சார் மீது குற்றப் பத்திரிகை

மேலும், “கால அவகாசம் உங்களுக்கு குறைவாக இப்போது இருப்பினும், உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். பிரிவு 1 அதிகாரிகள் பதவிக்கான நேர்காணலை சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பிறிதொரு தேதியில் நடத்துங்கள். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சு. வெங்கடேசன், “முதலில் செய்த நிர்வாகத் தவறை நியாயப்படுத்துவதற்காகவே இம்முடிவை மாற்ற மறுக்கிறார்கள் எனக் கருதுகிறேன். இது தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். நிறைய எண்ணிக்கையில் எழுதும் அலுவலக உதவியாளர் பதவிக்கான தேர்வை மாற்ற வேண்டும். குறைவான எண்ணிக்கையில் தேர்வர்கள் உள்ள, அதிகாரிகள் பதவிக்கான நேர்காணலை மாற்றலாமே.” என்று பரிந்துரைத்துள்ளார்.

13500 கோடி வங்கி மோசடி செய்த நீரவ் மோடி வழக்கு – பிப்ரவரி 25-ல் தீர்ப்பு

மேலும், “ஒவ்வொருவர் வாழ்க்கையும், அவர்களுக்கான வாய்ப்பும் முக்கியம். உள் ஆய்வுக் குழுவும் தேர்வர்களுக்கு உள்ள பிரச்சினையை மறுக்காத போது முடிவு மட்டும் இப்படி அமைந்தது ஏன்?  ‘அறுவை சிகிச்சை வெற்றி… நோயாளி காலி’ என்பது போல இருக்கிறது. தேதியை மாற்றுவதே தேர்வர்களுக்கு வழங்கப்படும் நீதி.” என்று கூறியுள்ளார்.

‘அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி காலியா?’ – வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு.வெங்கடேசன் கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்