கொரோனா காலத்தில்,ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது தமிழக அரசு பதிவு செய்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க முடியாமல் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியுள்ளது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்
இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உலகையே உலுக்கிய கொடிய கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களில் ஊரடங்குகளைப் பிறப்பித்துக் கட்டுப்பாடுகளை விதித்தன. தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் பசிப்பிணியைப் போக்கிடவும் வறியோரும், வாடி நலிந்தோரும், வழக்கமான தினக்கூலியினரும், அன்றாடம் வேலைக்குச் செல்வோரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க இயலாமல், பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிநபர் வருமானம் – இந்தியாவை முந்துகிறது வங்கதேசம் : ஐஎம்எப்
வயிற்றுப் பிழைப்பிற்காக ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மீறினார்களே தவிர வம்படியாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ வேண்டுமென்றே மீறவில்லை என்று கூறிய ஸ்டாலின், “தங்களின் அன்றாடப் பணிகளுக்குச் சென்ற லட்சக்கணக்கானவர்கள் மீது, அதிமுக அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழும், கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அந்த வழக்குகள் எல்லாம் தற்போது நிலுவையில் இருக்கின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இப்படிப் பதியப்பட்ட வழக்குகளால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுப்பதற்கு இந்த வழக்குகள் பெரும் தடையாக உள்ளன. இதனால் கொரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்ட அவர்களின் எதிர்காலமும் இந்த கிரிமினல் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளன.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா முழுஅடைப்பு – கிராமப்புறப் பெண் குழந்தைகளின் கல்விக்கு வேட்டு
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்ற இந்தத் தருணத்தில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த வழக்குகளையெல்லாம், சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கருதி, உடனே எவ்விதத் தாமதமும் இன்றித் திரும்பப் பெற்று – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், புது வாழ்வுத் தேடலுக்கும் வழிவகுத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.