Aran Sei

‘தமிழர்கள் என்பதாலே இலங்கை கடற்படை மீனவர்களை கொல்கிறது’ – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு

மிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே  இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இன்னலுக்கு ஆளாவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அண்மையில் இலங்கைத்தீவை ஒட்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று மூழ்கடிக்கப்பட்டு இருப்பதோடு அதில் இருந்த 4 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும், இச்சம்பவத்தில் தமது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போக்சோ சட்டம்: மும்பை உயர் நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பு – தடை செய்த உச்ச நீதிமன்றம்

”கடந்த காலங்களிலும் தமிழக மீனவர்கள் இலங்கை தீவினை ஒட்டிய கடற்பரப்புக்கு வரும்போது இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமையானது அவர்கள் ’தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இலக்கு வைக்கப் படுகிறார்கள்’ என்பதை வெளிக்காட்டுகிறது” என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இயற்கையின் சீற்றங்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்தவாறு கடலில் தமது தொழில்களை மேற்கொள்ளும் மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்ற சம்பவங்கள் பல்வேறு பிராந்தியங்களிலும் நடைபெறுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர்கள், இலங்கைத் தீவினை ஒட்டிய கடற்பரப்பில் எல்லை தாண்டும் மீனவர்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் கடற்படையினரால் இலக்கு வைக்கப்படுகிற சம்பவம் இதனை உணர்த்துவதாகத் கூறியுள்ளார்கள்.

போராட்டத்தை பற்றி பாடம் எடுக்கும் வன்முறையாளர்கள்: நடிகர் சித்தார்த் கண்டனம்

இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர்  ஜெய்சங்கர் வந்து சென்ற சில நாட்களிலேயே நடந்தேறிய இச்சம்பவம் இந்தியா மீதான இலங்கை அரசின் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாகக் கருதவேண்டியுள்ளது என்றும் இந்நிலையில், கடற்படையினரின் இந்த அத்துமீறல் தொடர்பாகச் சுயாதீன விசாரணைக் குழுவை இந்திய அரசு உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பின்னால் பாஜக இருக்கிறது – முதல் தடுப்பை உடைத்த விவசாயி சத்னம் சிங் பன்னு குற்றச்சாட்டு

”முகங்களைத் துணிகளால் மூடியவாறு எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தமது தாயக மீனவர்களது வலைகளை அறுக்கின்ற சம்பவங்களும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்வதாக எழும் குற்றச்சாட்டுக்குத் தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். அதோடு தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் தமிழக தாயக(ஈழதமிழர் மீனவர்கள்) மீனவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் வகையில் வலுவானதொரு உறவுப்பாலம் ஏற்படுத்த வேண்டும்” என்று எதிர்பார்ப்பதாக யாழ்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழர்கள் என்பதாலே இலங்கை கடற்படை மீனவர்களை கொல்கிறது’ – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்