Aran Sei

‘காஷ்மீரின் அழகு, கேரளாவின் கல்வி; உ.பியில் அதிசயம் நிகழ்த்தும்’ – யோகியின் கருத்துக்கு கேரள தலைவர்கள் பதிலடி

credits : the hindu

நேற்று முன்தினம்(பிப்பிரவரி 9) மாலை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது மாநில மக்களுக்கு காணொளி வழியாக அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, “உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி ஆட்சி அமைக்க சிலர் முயல்கிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலோ, வாக்கு செலுவத்தில் இருந்து கொஞ்சம் தவறினாலோ இந்த ஐந்தாண்டுகள் நான் செய்த உழைப்புகள் அழிந்துவிடும். காஷ்மீர், கேரளா  மற்றும் மேற்கு வங்கம் போல உத்தரப் பிரதேசம் மாறிவிடும்” என்று கூறியிருந்தார்.

தொடங்கியது உ.பி., தேர்தல் – விவசாயிகளின் பிரச்சனையை மனதில் வைத்து வாக்களிக்க பாரதிய கிசான் யூனியன் கோரிக்கை

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல் உத்தரப் பிரதேசம், கேரளாவாக மாறினால், சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அம்மக்கள் பெறமுடியும். மேலும், மதம் மற்றும் சாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத ஒரு நல்லிணக்கமான சமுதாயமாக அம்மாநிலம் மாறும். அதைத்தான் உத்தரப் பிரதேச மக்களும் விரும்புவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

யோகி ஆதித்யநாத்தின் கருத்துகளுக்கு பல தலைவர்களிடம் இருந்தும் கண்டனம் வந்துள்ளது.

கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள மக்களே! உத்தரப் பிரதேசம், கேரளாவைப் போல ஆக வாக்களியுங்கள். மதவெறி விடுத்து பன்முகத்தன்மை, நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றைத் தேர்ந்தெடுங்கள். கேரளக்காரார்கள், வங்காளிகள் மற்றும் காஷ்மீரிகளும் பெருமைமிகு இந்தியர்கள்தான்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாஜக சிதைக்கிறது என்கிறார்களே ஸ்டாலினும் மம்தாவும்? – பிரதமர் மோடியோடு நேர்காணல்

காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் கூறுகையில், “உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்றால் அம்மாநிலம், காஷ்மீர், வங்காளம், கேரளாவாக மாறிவிடுமென யோகி ஆதித்யநாத் வாக்காளர்களிடம் கூறுகிறார். உத்தரப் பிரதேசத்திற்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. காஷ்மீரின் அழகு, வங்காளத்தின் பண்பாடு மற்றும் கேரளாவின் கல்வியறிவு ஆகியவை இணைந்து அம்மாநிலத்தில் பல அதிசயங்களை நிகழ்த்திக்காட்டும். உ.பி., அரசாங்கத்தைப் நினைத்துப் பரிதாபப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் யோகி ஆதித்யநாத்தின் கருத்திற்கு விமர்சனங்களை வைத்துள்ளனர்.

‘காஷ்மீரின் அழகு, கேரளாவின் கல்வி; உ.பியில் அதிசயம் நிகழ்த்தும்’ – யோகியின் கருத்துக்கு கேரள தலைவர்கள் பதிலடி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்