Aran Sei

“சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்” – பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

மஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினையை பரிசீலிப்பதற்கான சரியான இடம் நாடாளுமன்றமே தவிர நீதிமன்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீங்கள் சமஸ்கிருதத்தில் உங்கள் பிரார்த்தனையை வரைகிறீர்கள். விளம்பரத்திற்காக நாங்கள் ஏன் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்? உங்கள் கருத்துகளில் சிலவற்றை நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் இதைப் பற்றி விவாதிக்க சரியான இடம் நாடாளுமன்றம். இதற்கு அரசியலமைப்பில் திருத்தம் தேவை இதில் எங்களால் முடிவெடுக்க முடியாது. இம் மனுவை நாங்கள் ஏற்க மறுத்து  தள்ளுபடி செய்கிறோம்.

நீதியின் மௌனம்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் செயல்பாடு ஒரு பார்வை

குஜராத் அரசின் முன்னாள் கூடுதல் செயலாளர் கே.ஜி.வன்சாரா இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்தியை அலுவல் மொழியாக தொடரும் அதே வேளையில் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“சமஸ்கிருதத்தில் உயிரியல், அறிவியல் ஒலிப்பு அமைப்பு உள்ளது. இது குழந்தைகளின் மூளை, தாள உச்சரிப்பு மற்றும் மனப்பாடம் செய்யும் திறனை வளர்க்கிறது”,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

இந்த நடவடிக்கை நாட்டின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் இந்தியை வழங்கும் தற்போதைய அரசியலமைப்பு விதிகளை சீர்குலைக்காது” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Source: indiatoday

Amit sha answerable for missing heroin | sathyam tv investigation revealed | Aravindakshan interview

“சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்” – பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்