Aran Sei

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் விடுதலை – பாதிக்கப்பட்ட கன்னியாஸ்ரிக்கு கேரள திரைக்கலைஞர்கள் ஆதரவு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் பிராங்கோ மூலக்கல் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்கு தொடுத்த கன்னியாஸ்திரிக்கு கேரள திரைக்கலைஞர்கள் பார்வதி மற்றும் ரீமா கலிங்கல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக உள்ளவர் பிராங்கோ மூலக்கல். இவர்மீது கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி  ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, பிராங்கோ மூலக்கல்லை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி,  பாதிரியார் பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், பிராங்கோ மூல்லக்கல் பிணையில் விடுதலையானார். அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று(ஜனவரி 14), இவ்வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் விடுதலை: பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மகளிர் ஆணையத் தலைவர் ஆதரவு

அப்போது, பாதிரியார் பிராங்கோ முலக்கல் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாக சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், பிராங்கோ மூலக்கலை விடுதலை செய்து உத்தரவிட்டது.

இத்தீர்ப்பு தொடர்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வரும் கன்னியாஸ்திரிகளில் ஒருவரான சீனியர் அனுபமா,  “பணமும் உடற்பலமும் வெற்றி பெற்றுள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பை எங்களால் நம்ப முடியவில்லை. நாங்கள் கலங்கி போயுள்ளோம்” என்று குறவிலங்காட்டில் உள்ள தனது கான்வென்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

திரைக்கலைஞர் ரீமா கல்லிங்கல், குறவிலங்காடு கன்னியாஸ்திரிகளின் புகைப்படத்தை ‘அவள்கொப்பம்’ (அவளுடன்) என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

திரைக்கலைஞர் பார்வதியும் தனது முகநூல் பக்கத்தில், கன்னியாஸ்திரிகளின் புகைப்படத்தை பதிவிட்டு  ‘எப்போதும் அவருடன் இருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அதிருப்தி தெரிவித்ததோடு, கன்னியாஸ்திரிக்கு தனது ஆதரவையும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அளித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் நீதிக்கான இந்த போராட்டத்தில் தேசிய மகளிர் ஆணையம் கன்னியாஸ்திரியுடன் துணை நிற்கும் என்றும் ரேகா சர்மா உறுதியளித்திருந்தார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் விடுதலை – பாதிக்கப்பட்ட கன்னியாஸ்ரிக்கு கேரள திரைக்கலைஞர்கள் ஆதரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்