இந்து கடவுள்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்த செய்தித் தாளில் கோழி இறைச்சியை பார்சல் செய்து விற்றதாக இஸ்லாமிய உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பால் பகுதியைச் சேர்ந்தவர் தலீப் ஹூசைன். இவர் அப்பகுதியில் கோழி இறைச்சிக் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி, இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட செய்தித் தாள்களில் கோழி இறைச்சியை பார்சல் செய்து, மத உணர்வைப் புண்படுத்தியாக கூறி இஸ்லாமிய உணவக உரிமையாளர் தலீப் ஹூசைன் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத உணர்வுகளைப் தலிப் புண்படுத்தியதாக வந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்துள்ளனர்.
MK Stalin | எதை செஞ்சாலும் குற்றம் சொல்லும் திமுக வெறுப்பாளர்கள் | Arunthathiyar | DMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.