Aran Sei

பேரறிவாளனை போல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்யுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் கடிதம்

பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 32 ஆண்டுகளாக மதுரை மத்தியச் சிறையில் இருந்தவர்தான் இந்த ரவிச்சந்திரன். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் தற்போது பரோலில் விடுதலையாகி தூத்துக்குடி மாவட்டம் சூரப்பநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

‘என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்கிறேன்’ – பேரறிவாளன் நெகிழ்ச்சி

இந்நிலையில், பேரறிவாளனை போல் ராஜீவ்காந்தி கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற தான் உட்பட 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “32 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். தற்போது தங்கள் உத்தரவின் பேரில் பரோலில் இருந்து வருகிறேன். இதனால் உடல் நலம் குன்றிய என் வயதான தாயாரை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள முடிகிறது.

பேரறிவாளன் விடுதலை: நீதி, சட்டம், அரசியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

7 பேரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரிடம் மீண்டும் இவ்விவகாரத்தை கொண்டு செல்ல விரும்பாத உச்ச நீதிமன்றம், தனது உள்ளார்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதேபோல் தமிழக அரசுக்கும் உள்ளார்ந்த அதிகாரம் உள்ளது. இந்த முன் விடுதலை தொடர்பாக நான் அனுப்பிய மனு மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எஞ்சியுள்ள நான் உட்பட 6 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை, ஆளுநரிடம் அனுப்பாமல் தமிழக அரசுக்குரிய நிர்வாக ஆணை அடிப்படையில் எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Source : newindianexpress

Nenjukku Needhi I கை கொடுத்தா தீட்டு, கை கொடுக்க கூடாது I VCK Sanga Tamizhan I Jamadagni

பேரறிவாளனை போல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்யுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்