Aran Sei

பெட்ரோல், டீசல் விலையை மாநிலங்கள் குறைக்க கோரியதற்கு பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும் – தெலுங்கானா முதலமைச்சர் விமர்சனம்

ரிபொருளுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உருவாகி வரும் கொரோரா நிலைமை குறித்து முதலமைச்சர்களுடனான மெய்நிகர் உரையாடலின் போது பேசிய பிரதமர் மோடி, கடந்த நவம்பரில் ஒன்றிய அரசு கலால் வரியைக் குறைத்த போதிலும் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை என்றும் மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

வரிகளைக் குறைத்து அதன் பலனை குடிமக்களுக்கு மாற்றுமாறு மாநிலங்களை ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

‘ஒன்றிய அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது’ – பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக ஒன்றிய அரசின் பேச்சைக் கேட்கவில்லை, மேலும் அந்த மாநிலங்களின் குடிமக்கள் தொடர்ந்து சுமையாக உள்ளனர் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும், மாநில அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது என்ற பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய மெய்நிகர்  சந்திப்பு குறித்து பேசிய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், “பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தியதற்காக அவர்தான் தன்னைப் பற்றி வெட்கப்பட வேண்டும். மாநிலங்களைக் கேட்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசால் ஏன் வரியைக் குறைக்க முடியாது? தெலுங்கானா அரசு கடந்த 2015-ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது. அதன்பின் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு உயர்த்தவில்லை. ஆனால், ஒன்றிய அரசு வரிகளை உயர்த்தியது மட்டுமின்றி, செஸ் வரியையும் விதித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“உங்களுக்கு (பிரதமர்) தைரியம் இருந்தால், மேம்படுத்தப்பட்ட வரிகள் குறித்து விளக்கவும்” என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

Source: timesofindia.indiatimes

தமிழக அரசு மாரிதாஸை கூப்பிட்டு விசாரிக்கணும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்

பெட்ரோல், டீசல் விலையை மாநிலங்கள் குறைக்க கோரியதற்கு பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும் – தெலுங்கானா முதலமைச்சர் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்