Aran Sei

கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

கொரோனின் என்ற மருந்துக்கு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின் படி, கொரோனா தடுப்பு மருந்து என்ற அங்கீகாரத்தை, ஆயுஷ் அமைச்சகம்  வழங்கியுள்ளதாக, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையில், கொரோனாவிற்கு எதிராக போராடும் முதல் தடுப்பு மருந்து இதுதான் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (பிப்பிரவரி 19), டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் சாலை மற்றம் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தலைமை தாங்கிய நிகழ்ச்சியில், கொரோனில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதியவகை கொரோனா: ‘தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மெத்தனம்’ – ராகுல் காந்தி கருத்து

“உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களின் படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஆயுஷ் பிரிவிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட மருந்து என்பதற்கான சான்றிதழை (CoPP) கொரோனில் பெற்றுள்ளது.” என்று பதஞ்சலி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இச்சான்றிதழை பயன்படுத்தி, கொரோனில் மருந்தை 158 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

இயற்கை முறையிலான மருத்துவத்தின் அடிப்படையில் நியாயமான விலையில் இந்த சிகிச்சையை வழங்குவதன் வழியாக, கொரோனில் மனிதகுலத்திற்கே உதவியாக இருக்கும் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

 

கொரோனா தடுப்பூசி – 12 நாட்களில் 9 பேர் உயிரிழப்பு – ” வெளிப்படைத்தன்மை வேண்டும் “

ஆயுஷ் அமைச்சகத்தில் சமர்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொரோனில் மாத்திரையை, அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு கருவியாக அங்கீகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி, கொரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுதும் உச்சத்தில் இருந்த போது, ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கொரோனில் மருந்தை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அறிவியல் பூர்வமாக இம்மருந்து சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்படவில்லை என்று அதற்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, அந்த மருத்நதை, ‘எதிர்ப்பு சக்தியை கூட்டும்’ மருந்து மட்டும்தான் என்று, ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகள் – காரணம் என்ன?

கடந்தாண்டு ஜனவரி மாதம், கொரோனாவிற்கான ஆயுர்வேத முறையிலான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய பதாஞ்சலி நிறுவனம், கொரோனில் மருந்தை தயாரித்துள்ளது.

Source: PTI

கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்