பரந்தூர் விமான நிலையத்திற்காக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தயாரித்திருந்த சாத்தியக் கூறு அறிக்கையை பகிர முடியாது என தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட தகவல் என்கிற காரணத்தைக் கூறி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மறுத்துள்ளது.
பரந்தூா் அல்லது பன்னூா் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு இடத்தைத் தோ்வு செய்யலாம் என்று ஒன்றிய அரசு பரிந்துரைத்திருந்த நிலையில், எதனடிப்படையில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது என்ற தகவலை ஏன் தமிழக அரசு தர மறுக்கிறது என் பரந்தூர் பகுதியில் உள்ளகிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும். தமிழக அரசு இவ்விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படை தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறது என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் அருகே பரந்தூரில் ரூ.60,000 கோடியில் பசுமை விமான நிலையம் அமையவுள்ளது. இது சென்னையின் 2-ஆவது விமான நிலையமாக 4,971 ஏக்கரில் அமைக்கவிருப்பதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மேம்பாலங்கள் பல அமைத்தும்கூட போக்குவரத்து நெரிசலும் அதிகமாகிக் கொண்டே வருவதால் சென்னைக்கு அருகிலேயே மற்றொரு விமான நிலையம் அமைக்க ஒன்றிய, மாநில அரசுகள் முடிவு செய்தன.
இந்த நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சென்னைக்கு அருகில் உள்ள பல்வேறு இடங்களை பார்த்து விமான நிலையம் அமைப்பதற்கான அடிப்படை சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனா்.
சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூா், படாளம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவாா்சத்திரம் அருகே பன்னூா், பரந்தூா் ஆகிய இடங்களில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
’என்.எல்.சி விபத்தில் பலியான 20 தொழிலாளர்கள் – நிர்வாகமே காரணம்’ – பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
இவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் பரந்தூா் அல்லது பன்னூா் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு இடத்தைத் தோ்வு செய்யலாம் என்ற நிலையில் பரந்தூரில் விமான நிலையத்தை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமாா் 6 கி.மீ. தொலைவில் பரந்தூா் அமைந்திருந்ததாலும், வடக்கில் அரக்கோணமும், தெற்கில் காஞ்சிபுரமும் இருந்ததாலும் சென்னையில் 2-ஆவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதே சிறந்தது என அதிகாரிகள் தீா்மானித்தனா். சென்னையிலிருந்து 73 கி.மீ.தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் பரந்தூா் அமைந்துள்ளது.
மாநிலங்களவை திமுக உறுப்பினா் கனிமொழி என்.வி.என்.சோமு சென்னையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் உள்ளதா என்றும் அதற்கான திட்டமதிப்பீடு எவ்வளவு என்றும் கேள்வி எழுப்பினாா்.
இவரது கேள்விக்குப் பதிலளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், சென்னைக்கு அருகே புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசால் முதலில் 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டன.
அந்த 4 இடங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா், பசுமை விமான நிலையம் அமைக்க அனைத்து வகையிலும் ஏற்ற இடம் என முடிவு செய்து அதனை ஒனிய அரசுக்கு தெரிவித்திருந்தது. எனவே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா்.
புதியதாக பரந்தூரில் அமையவுள்ள பசுமை விமான நிலையமானது 4,971 ஏக்கரில் ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் வகையில் இரு ஓடு பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. விமான நிலையத்தின் நுழைவுப்பகுதி சென்னை-பெங்களூரு 6 வழிச்சாலையிலிருந்து 6 கி.மீ.தொலைவில் அமையவுள்ளது
பரந்தூரில் விமான நிலையம் அமையப் போகும் அரசின் அதிகாரப்பூா்வ அறிவிப்பால் அந்தப் பகுதியில் நிலங்களின் மதிப்பு மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 நாட்களுக்கும் மேலாக ஏகனாபுரத்தில் 13 கிராம மக்கள் இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைய திட்டமிட்டுள்ள பகுதிகள் பெரும்பாலும் குடியிருப்புகளும், விவசாய விளைநிலங்களும், ஏராளமான நீர்நிலைகளும் நிறைந்த பகுதிகளாகும் என்பதால் அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள்: ஐபிசிசி அறிக்கை விடுக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன?
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை இந்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால் எதனடிப்படையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியது என்கிற சாத்தியக் கூறு அறிக்கையை பொதுவெளியில் பகிர முடியாது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தகவல் பெரும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இது விலக்கு அளிக்கப்பட்ட தகவல் என்கிற காரணத்தைக் கூறி, பதில் தர முடியாது என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மறுத்துள்ளது.
ஒருபுறம் போராடும் மக்களிடம் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும், மக்கள் பாதிக்காதவாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறிவிட்டு, மறுபுறம் அதற்கு மாற்றமான முறையில் திட்டத்திற்கான பணிகளை செயல்படுத்துவது என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்று அரசியல் தலைவர்களும் சுற்றுசூழல் ஆர்வலர்களும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பரந்தூா் அல்லது பன்னூா் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு இடத்தைத் தோ்வு செய்யலாம் என்று ஒன்றிய அரசு பரிந்துரைத்திருந்த நிலையில், எதனடிப்படையில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது என்ற தகவலை ஏன் தமிழக அரசு தர மறுக்கிறது என் பரந்தூர் பகுதியில் உள்ள கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மட்டும் முழு வெளிப்படைத் தன்மையோடு நடந்துகொள்ள ஏன் மறுக்கிறது என்று பரந்தூர் பகுதியில் உள்ள கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஜல்சா கட்சியின் பேக்கரி டீலிங் | (ஆ)பாசமலர் சூர்யா டைசியின் உருட்டு | Aransei Roast | Annamalaibjp
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.