Aran Sei

பரந்தூர் விமான நிலையம்: விவசாய நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 13 கிராம மக்கள் பேரணி

காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன.

அதேவேளையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான ஒன்றிய அரசின் சாத்தியக்கூறு அறிக்கையை பகிர தமிழக அரசு மறுப்பு – வெளிப்படை தன்மையில்லா அரசு என கிராம மக்கள் குற்றச்சாட்டு

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கும், நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் இன்று (டிசம்பர் 19) பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதனைத் தொடர்ந்து பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்தி அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆட்டுக்குட்டியின் costly வாட்ச் ஆடு மேய்ச்சு வாங்குனதா? இல்ல | Aransei Roast | Annamlai | BJP

பரந்தூர் விமான நிலையம்: விவசாய நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 13 கிராம மக்கள் பேரணி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்