நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கிய பேரவையின் சிறப்பு அமர்வில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தின் நகல், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முன் வைக்கப்பட்டது .
உயர்மட்ட குழுவின் அறிக்கை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை. மிகைபடுத்தப்பட்ட யூகங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாநில தேர்வு நிலையை உற்று நோக்கும் போது நீட் தேர்வு தேவையானது. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட குழுவின் காமாலை கண் கொண்ட ஒருதலை பட்சமான பார்வையையே அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு மட்டுமே தமிழகம் முக்கியத்துவம் அளிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.
‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், நீட் திசையற்று செயல்படுகிறது; மருத்துவ கல்வி பெற உரிய தகுதி உடையோருக்கு எதிராக இருக்கிறது. பொருளாதாரத்தோடு சமூக அந்தஸ்துடன் கூடிய படிப்பறிவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கே நீட் தேர்வால் அதிக ஆதாயம் இருக்கிறது என்று கூறுவது ஆதாரமற்ற அனுமானங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கே நீட் தேர்வில் அதிக முன்னுரிமை கொடுப்பதாக நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. மருத்துவத்துறையின் அடிப்படையே, அறிவியல் பாடத்திட்டம் என்பதாலேயே அவ்வாறு வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிபுணர் குழு, இதற்கு மாற்றான கூற்றை முன்வைத்து ‘அனைத்து பாடத்திட்டத்தையும்’ சேர்க்க வலியுறுத்துகிறது. நிபுணர் குழுவின் அப்பரிந்துரை, வினோதமாக இருக்கிறது. தகுதி நிர்ணயிமின்றி செயல்பட வழிவகுப்பது போல உள்ளது.
நீட்டுக்கு எதிரான போரில் தமிழ்நாடு வெல்லும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் உரை
நீட் தேர்வு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு 30 முதல் 38 அரசுப்பள்ளி மாணவர்கள், அதாவது மொத்த மாணவர்களில் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளார்கள் என சில தரவுகள் கூறுகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள், மருத்துவத்துக்கு குறைவாக சேருவதற்கு மாநில அரசின் கல்வித் திட்டங்கள் வழி வகுக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சமூக நீதி மறுப்பாக இருக்கும் இந்த நிதர்சனத்தை உணராமல், நிபுணர் குழு அறிக்கை நீட் தேர்வை குறை சொல்லியுள்ளது.
நீட் தேர்வு வந்தபிறகு சமூக நீதி மறுக்கப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் கோச்சிங் செண்டர் மூலம் பயிலும் மாணவர்களுக்கே நன்மைகள் கிடைப்பதாகவும், அது கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் அறிக்கை சொல்கிறது. எது எப்படியாகியினும், நிபுணர் குழு அறிக்கை மாநில அரசு நடத்தும் பொதுத்தேர்விலும் இப்படியான கோச்சிங்தான் பிரச்சினை என்ற உண்மையைக் கூறாமல் கடந்துவிடுகிறது.
நிபுணர் குழுவின் பார்வை முழுவதும் காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல, இருப்பதைவிட்டுவிட்டு வேறொன்றை பார்ப்பது கண்கூடாக தெரிகிறது.
நீட் விலக்கு மசோதா : தமிழ்நாடு அரசுக்கே திருப்பியனுப்பிய ஆளுநர்
வேலூர் கிறிஸ்துவ கல்லூரி மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையேயான எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு சேர்க்கை குறித்த வழக்கில் நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவ கல்வி தரம் உயர்ந்திருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியல் சட்ட விதி 46 மற்றும் 47 அவற்றின்படி பட்டியலின மக்கள் & பட்டியலின மலைவாழ் மக்கள் & பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் நீட்தேர்வு வந்தபிறகு மெரிட் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளார்கள். அரசியல் சாசனம் 51A உட்பிரிவு J படி, நீட் தேர்வு அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது. நீட் தேர்வு பட்டியலின மக்கள் & பட்டியலின மலைவாழ் மக்கள் & பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் மருத்துவக் கனவுக்கு உயிர்கொடுத்துள்ளது.
இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும் – உச்சநீதிமன்றம்
எளியோரை காக்கவே நீட் உருவாக்கப்பட்டுள்ளது; அதை உணர்ந்தே அதை நாடு முழுவது அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், மாநில அரசு அதை நிராகரிக்க உரிமை கோருவது எப்படி நியாயம் என்று ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்?
நீட் விலக்கு மசோதா மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இயற்றப்பட்டு இருக்கிறது என்று எனக்கு தெளிவாக தெரிகிறது. இந்திய அரசியல் சாசனம் சட்டப்பரிவு 200 படி தான் நீட் வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே சட்டப்பேரவை தலைவர் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யவும். அதற்காக திருப்பி அனுப்புகிறேன்” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Source: newindianexpress, the hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.