Aran Sei

கடவுளை முட்டாளாக்கிய இஸ்லாமியர்கள் கோயில்களை இடித்து மசூதிகளை கட்டியுள்ளனர்: பாஜக தலைவர் ராம்சுரத் ராய் கருத்து

ஸ்லாமியர்கள் கடவுளை ஏமாற்றி இந்துக்களுக்குச் சொந்தமான அனைத்து கோயில்களையும் அபகரித்தனர் என்று பீகார் அமைச்சரும் பாஜக தலைவருமான ராம் சூரத் ராய் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் வீட்டிற்கு செல்லும் இந்துக்களை இஸ்லாமிய தொப்பியை அணியச் சொல்லி அவர்கள் வரவேற்கிறார்கள். அதேபோல் இஸ்லாமியர்கள் கடவுளையும் முட்டாளாக்கியுள்ளனர். கடவுளை முட்டாளாக்கிய பின்பு அவர்கள் கோயில்களை இடித்து மசூதிகளை கட்டியுள்ளனர் என்று ராம் சூரத் ராய் தெரிவித்துள்ளார்.

ஆக்ரா மசூதிக்கு கீழ் புதைக்கப்பட்ட இந்து கடவுள் சிலைகளை மீட்க வேண்டும்: ஒன்றிய அரசு, தொல்லியல் துறைக்கு இந்துத்துவவாதிகள் நோட்டிஸ்

இன்று, கடவுள் பூமிக்கு அடியிலிருந்து சிவன், ராமர் மற்றும் கிருஷ்ணரின் வடிவத்தில் தோன்றுகிறார். அப்படி கடவுள்கள் தெரிய வரும் நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது. ஆகவே வரும் நாட்களில் இஸ்லாமியர்கள் அந்த கைவிட வேண்டியிருக்கும் என்று ராம் சூரத் ராய் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அந்த நிலத்தை அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கவில்லை. அந்த நிலம் நமது மூதாதையர்கள் மற்றும் இந்து கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், வரும் நாட்களில் அவர்களே அந்நிலத்தின் உடைமையை கைவிட வேண்டியிருக்கும் என்று பீகார் அமைச்சரும் பாஜக தலைவருமான ராம் சூரத் ராய் தெரிவித்துள்ளார்.

Source : india today

கண்ணீர்விடும் Kashmiri Pandit கள் கண்டுகொள்ளாத Amit Shah

கடவுளை முட்டாளாக்கிய இஸ்லாமியர்கள் கோயில்களை இடித்து மசூதிகளை கட்டியுள்ளனர்: பாஜக தலைவர் ராம்சுரத் ராய் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்