Aran Sei

உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம் – மருத்துவத்துறையை காவிமயமாக்குவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

ட்டதாரி மருத்துவர்கள் எடுக்கும் உறுதிமொழியான ஹிப்போக்ரடிக் உறுதிமொழி வழக்கம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ‘சரக் ஷபத்’ என்ற உறுதிமொழியை எடுக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுர்வேதத்தின் தந்தை என அழைக்கப்படும் மகரிஷி சரக்கின் பொன்மொழிகளை மருத்துவர்கள் உறுதி மொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பரவலாக அறியப்பட்ட மற்றும் பின்பற்றப்படும் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஹிப்போக்ரடிக் உறுதிமொழியானது, மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் ஹிப்போகிரட்டீஸால் எழுதப்பட்டது.

‘ஒவ்வொரு மனிதரின் மரபணுவும் தனித்துவமானதென இந்துக்கள் நம்புவர்’- ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ராகுல் காந்தி பதிலடி

“எனது திறனின் வழியாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவ நான் இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்துவேன். ஆனால், காயம் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது தவறிழைக்கும் நோக்கிலோ ஒருபோதும் இச்சிகிச்சை முறையை பயன்படுத்த மாட்டேன்…” என அவ்வுறுதிமொழி கூறுகிறது.

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மருத்துவத் துறையில் சரக் ஷபத் உறுதிமொழியை அறிமுகப்படுத்தப்படுவது தீவிரமாகி வருகியது என்று ஸ்கூப்வூப் (Scoopwhoop.com) இணையதளம் தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான டாக்டர். ஹரிஜித் பாட்டி ஸ்கூப்வூப்பிடம் பேசியபோது, “இச்செயலானது எல்லாவற்றையும் காவி நிறமாக்கும் முயற்சி. ஆர்எஸ்எஸ் தன்னை மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் என்று காட்ட விரும்புகிறது. இந்திய மருத்துவத்தை பரவலாக்குவதோ அல்லது ஆயுர்வேதத்தின் நன்மைகள் பரப்புவதோ தவறில்லை. ஆனால், அவர்கள் மேற்கத்திய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை முற்றிலும் குறைத்து காட்ட விரும்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது” என்று கூறியுள்ளார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது – முத்தரசன் விமர்சனம்

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.ரவிந்திரநாத், “நீ ஆசைப்பட்டது வெற்றியடைய, சொத்துக்களும் புகழும், இறப்பிற்குப் பிறகு மருத்துவன் என்ற முறையில் சொர்க்கமும் கிடைத்திட, பசுக்கள் தொடங்கி எல்லா உயிர்கள் மற்றும் பிராமணர்கள் நலனுக்குகாக வழிபாடு ( pray) செய் என்ற வரிகள் சரகர் உறுதி மொழியில் வருகிறது. அதை ஏன் மருத்துவ மாணவர்கள் உறுதி மொழியாக ஏற்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“மருத்துவத்தை காவிமயமாக்குவதை நாங்கள் நிராகரிப்போம். அறிவியலுக்குப் புறம்பான எந்த உறுதி மொழியையும் ஏற்க முடியாது. மதச்சார்பற்ற மனித நேய மருத்துவர்களாக திகழ்வோம். நவீன அறிவியல் மருத்துவத்தின் மதச்சார்பின்மையை பாதுகாப்போம். இந்துத்துவ மயமாக்கப்படுவதை தடுப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.

Source: Scoopwhoop.com

உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம்  – மருத்துவத்துறையை காவிமயமாக்குவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்