கல்வி கட்டணம் அதிகரித்துள்ளதை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் போராடி வந்த நிலையில், மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத் துறையின் கீழ் இயங்குவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கட்டண உயர்வு கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில், கட்டணக் குறைப்பை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் மின்சாரம், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
’வளரும் பொருளாதாரத்தை அழிப்பது எப்படி? பாடம் எடுக்கும் மோடி அரசு’ – ராகுல் காந்தி விமர்சனம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ், ராஜா முத்தய்யா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிகள், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டவுடன், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசுப் பல் மருத்துவக் கல்லூரி என்று முறையே அழைக்கப்படுகிறது.
இங்கு இளங்கலை பொது மருத்துவப்படிப்பான, எம்பிபிஎஸ் கல்வி கட்டணம், ஆண்டுக்கு 5,40,00 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. முதுகலை கல்வி கட்டணம் ஆண்டுக்கு 9,60,000 ரூபாய் வாங்கப்படுகிறது. ஆனால், பிற அரசு கல்லூரிகளில், இளங்கலை மருத்துவப்படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.13,600 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. முதுகலை படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.25,000 மட்டும்தான்.
பிற அரசுப் பல் மருத்துவ கல்லூரிகளில், இளங்கலை பல் மருத்துவ படிப்பிற்கு ரூ.10,600. கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பிற்கு 5,40,000 ரூபாயும், முதுகலைக்கு ரூ.9,60,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு
ஆகவே, பிற அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போல், கடலூர் மருத்துவக் கல்லூரியிலமுஅரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்கக் கோரி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியையும் உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஆகவே, கடலூர் மருத்துவக் கல்லூரியையும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.
தங்காத விடுதிக்கு கட்டணமா? – சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் இணைந்து, போராட்டத்தை நடத்தின. போராட்டத்தில், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.
இதற்கிடையில், கடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கினர். மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியைச் சுகாதாரத்துறையின் கீழ் இயங்க தமிழக அரசு ஆணை பிரப்பித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.