இந்து மதத்தையும், கடவுள்களையும் இழிவாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது. அதனைத் துண்டு துண்டாக வெட்டி வீசுவோம் என்று பேசிய மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா. சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுரை சிலைமான் பகுதியில் உள்ள கல்லம்பல் வில்வநாதர் கோவிலில் மாவட்ட பாஜக சார்பில் கடந்த 7-ம் தேதி சிறப்புப் பூஜை நடந்தது. இதில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா. சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதி பேசிய மகா. சுசீந்திரன், “இந்து சமயத்தை கேவலப்படுத்துவதற்காகவே ஒரு கும்பல் திரிந்து வருகிறது. அவர்கள் சுய லாபம்-அரசியல் ஆதாயத்திற்காக, இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். அதனை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்து மதத்தையும், கடவுள்களையும் இழிவாக பேசுபவர்களின் உடலில் நாக்கு இருக்காது. அதனைத் துண்டு துண்டாக வெட்டி வீசுவோம் என்று பேசியுள்ளார்.
இந்த பேச்சு தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாக்கு வெட்டப்படும் என பேசிய விவகாரத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் நாக்கு வெட்டப்படும் என பேசிய விவகாரத்தில் பாஜக செயலாளர் மகா. சுசீந்திரன் மீது, சிலைமான் காவல்துறையினர், பொது இடத்தில் அவமரியாதையாக பேசியது, சட்டம்-ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேசியது, தொண்டர்களை வன்முறைக்குத் தூண்டியது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : dailythanthi
“என்ன டார்ச்சர் பண்ணாதீங்க பொறுப்பா நடந்துக்கங்க” | சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் | M K Stalin | DMK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.