பிப்பிரவரி 14 அன்று மத்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி முதுகலை அரசுக் கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை வலதுசாரி அமைப்பினர் எதிர்த்து “ஜெய் ஸ்ரீராம்” முழக்கமிட்டதைத் தொடர்ந்து, கல்லூரிக்குள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்த முதல்வரின் உத்தரவை அடுத்தது இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹிஜாப் அணிந்த 2 மாணவிகள் அந்த கல்லூரிக்குள் நுழைந்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சிலர் முழக்கமிடும் காணொளி ட்விட்டரில் வைரலானதை அடுத்து, மத்திய பிரதேசத்தில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
“கல்லூரி முதல்வர் ஹிஜாபுக்கு தடை விதித்த உத்தரவை விசாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். மத்திய பிரதேசத்தில் யாரும் இந்த விவகாரத்தைக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று ததியாவின் சட்டமன்ற உறுப்பினரான மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இங்கு எந்த மாணவியாவது ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதாய் இருந்தால்,அதே கல்லூரியின் இந்து மாணவர்கள் காவி நிறத்திலான சீருடையில் கல்லூரிக்கு வருவார்கள் என்றும், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம் என்று பஜ்ரங் தள் யை சேர்ந்த அஜய் சிங் ராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், துர்கா வாஹினி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய இளைஞர்கள் இந்த கல்லூரிக்கு வந்த பிறகுதான் இந்த சம்பவம் நடந்ததாகவும், ஹிஜாப் அணிந்த 2 மாணவிகளைக் கண்டதும் காவி வலதுசாரி அமைப்பினர் கல்லூரிக்குள் போராட்டம் நடத்தியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.