நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்.ஐ.சி) பங்குகள் விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கி மே 9 ஆம் தேதி நிறைவடையும் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் 3.5 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதன் மூலம் ரூ. 21 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில், ரூ 31.6 கோடி மதிப்பிலான 5 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிருந்தது. இதற்காக இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை ஆணையமான செபியிடம் வரைவு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தனியார் மயமாகிறதா எல்ஐசி? – நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க பரிசீலிக்கும் ஒன்றிய அரசு
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பங்கு சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையினால், எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை தடைபட்டது. இதனால் கடந்த வாரம், பங்குகள் விற்பனையின் அளவை 5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாக குறைக்க அரசாங்கம் முடிவு செய்தது.
5 விழுக்காடு பங்குகள் விற்பனை முறையிலிருந்து விலக்கு கோரி செபியிடம் ஆவணங்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்ஐசி நஷ்டமடைய வற்புறுத்தலா? – அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
செபியின் விதிமுறைகளின்படி, ஒரு லட்சம் கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட நிறுவனங்கள் 5 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். எல்.ஐ.சியின் மொத்த பங்கு மதிப்பு ரூ. 6 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Source: PTI
சட்டமன்றத்தில் அதிரடி காட்டிய ஸ்டாலின்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.