உத்தரபிரதேச முதலமைச்சர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாறியுள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கி அவர்களின் வீடுகளை இடித்துத் தள்ளுவாரா? என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ஒரு பேரணியில் கலந்து கொண்டு பேசிய ஓவைசி, ஜாவேத் முகமதுவின் வீடு இடிக்கப்பட்ட விவகாரத்தைக் குறிப்பிட்டு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்து பேசியுள்ளார்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்ததற்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டங்களின்போது கலவரம் மற்றும் கல்வீச்சு சம்பவங்களை நடைபெற்றது. இந்த வன்முறையின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் உறுப்பினர் ஜாவேத் முகமதுவின் வீட்டை உத்தரபிரதேச அரசு இடித்து தள்ளியது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரானஇவரின் மகள் அஃப்ரீன் பாத்திமா, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாணவர் அணி தேசிய செயலாளராகவும் உள்ளார்.
சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜாவேத்தின் வீட்டிற்கு வந்த அலகாபாத் காவல்துறையினர் வீடு இடிப்பதற்கான நோட்டீசை ஒட்டியுள்ளனர். ஜாவேத்தின் பெயரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடு அவரது மனைவியின் பெயரில் உள்ளது. வீடு அமைந்திருக்கும் நிலம், அவர்களின் பூர்வீக சொத்து. இதில் ஜாவேத்திற்கு சட்டப்பூர்வ பங்கு எதுவும் இல்லை.
மே 10 ஆம் தேதி முன் அறிவிப்பின்படி, மே 24 ஆம் தேதி விசாரணை நடைபெற்று, மே 25 ஆம் தேதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், அந்த நோட்டீஸில் சுற்றறிக்கை எண், உத்தரவு எண் உள்ளிட்ட எந்த அடிப்படை விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. இந்த நடவடிக்கைகள் எதுவும் குடும்பத்தினருக்கு தெரியாது. எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டின் உரிமையாளரின் பெயரில் நோட்டீஸ் வழங்கப்படவில்லை.
மேலும், ஜூன் 10 தேதி வீடு இடிப்பதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் 11 தேதி இரவு 11 மணிக்கு தான் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜாவேத்தின் வழக்கறிஞர் கே.கே. ராய், “சனிக்கிழமை இரவு ஜாவேத் பெயரில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஞாயிற்கிழமை ஜாவேத்தின் மனைவியின் பெயரில் இருக்கும் வீடு இடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டப்படி மனைவியின் சொத்தில் கணவருக்கு பங்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Source : NDTV
அண்ணாமலை முட்டுக் கொடுப்பாரா? பாலியல் குற்றவாளியை தண்டிக்க போராடுவாரா? | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.