Aran Sei

பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருக்கு துணைநிற்பது என் கடமை – காஷ்மீரில் ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்கும் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி

Image Credits: The Print

பாசிச சக்திகளுக்கு எதிராக துணிச்சலாக சவால் விடுபவருக்கு துணை நிற்பது என் கடமை என்று நான் நினைக்கிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய ராகுல் காந்தியின் பயணத்தில் நான் இணைய உள்ளேன் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.

“காந்தியை கொன்ற சித்தாந்தத்துடன் நாம் இன்று போராடுகிறோம்” – கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

இதனிடையே, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 109-வது நாளான கடந்த 24-ம் தேதி டெல்லியை எட்டியது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி உரையாற்றினார். அதன் பின்னர், கிறிஸ்துமஸ் – புத்தாண்டையொட்டி யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளைக்கு பின் ஜனவரி 3-ம் தேதி யாத்திரை மீண்டும் டெல்லியிலிருந்து தொடங்குகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தியின் ஓந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரை சென்றடையும்போது அந்த யாத்திரையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தியும் பங்கேற்க உள்ளார்.

‘தேசத்துக்காக கதர்’ ஆனால் தேசியக் கொடிக்கு சீன பாலியஸ்டர் – பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல்காந்தியுடன் பங்கேற்க எனக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் அடங்காத துணிச்சலுக்கு வணங்குகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக துணிச்சலாக சவால் விடுபவருக்கு துணை நிற்பது என் கடமை என்று நான் நினைக்கிறேன். சிறந்த இந்தியாவை நோக்கிய ராகுல்காந்தியின் பயணத்தில் நான் இணைய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Source : the print

லட்சுமி ராமகிருஷ்ணனின் சனாதனம் | அக்ரஹாரத்தை அலற விடும் திருமா | Aransei Roast | VCK | Thiruma

பாசிச சக்திகளுக்கு சவால் விடுபவருக்கு துணைநிற்பது என் கடமை – காஷ்மீரில் ராகுலின் நடைப்பயணத்தில் பங்கேற்கும் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்