Aran Sei

‘வங்காளத்தின் துரோகிகளை சுட்டுக்கொல்வோம்’ – மேற்கு வங்கத்தில் முழக்கமிடும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக

நேற்று (ஜனவரி 20), மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் சந்தனகரில், பாஜக சார்பில் பேரணி நடைபெற்றுள்ளது. பாஜக மூத்த தலைவரான சுவேந்து ஆதிகாரி, ஹூக்ளி மக்களவை உறுப்பினர் லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, பேரணியில் கலந்துக்கொண்ட உள்ளூர் பாஜக தலைவர்கள், “வங்காள துரோகிகளை சுட்டுக்கொல்ல வேண்டும்.” என்று முழக்கம் எழுப்பியுள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க தேர்தல் – சிஏஏ குறித்து அடக்கி வாசிக்கும் அமித் ஷா – ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜக

பின்னர் இந்த முழக்கத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அவர்கள், “தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை இராணுவம் சுட்டுக்கொல்ல வேண்டும்.” என்ற முழக்கத்தை வைத்தனர். இதற்கு பதிலளித்த ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “தலைமை எதை பிரசங்கம் செய்கிறதோ அதை தான் கட்சியினர் கடைப்பிடிப்பார்கள்.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (ஜனவரி 19), கொல்கத்தாவில் நடந்த திரிணாமூல் காங்கிரஸ் பேரணியிலும் இதே முழக்கம் எழுப்பட்டதை, பாஜக கடுமையாக கண்டித்திருந்தது.

மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்

கடந்த இரண்டு நாட்களாக, கொல்கத்தாவிலும் கிழக்கு மெதினாபூரிலும் நடந்த பாஜகவின் நிகழ்ச்சிகளின் போது இரு கட்சிகளின் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறியுள்ளன.

இது போன்ற முழக்கங்களை ஊக்குவிக்கக் கூடாது என்றும் இரு கட்சிகளின் தலைமைகளும் இதுபோன்ற முழக்கங்களை தவிர்க்குமாறு தங்களின் ஆதரவாளர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் அரசியல் பார்வையாளர்கள்  கூறுவதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘வங்காளத்தின் துரோகிகளை சுட்டுக்கொல்வோம்’ – மேற்கு வங்கத்தில் முழக்கமிடும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்