போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் அடிப்படையில், ஒரு குழந்தையை வெறுமனே தொடுவதை. பாலியல் தாக்குதல் என்று கூறுமுடியாது என்றும், மாறாக, பாலியல் உள்நோக்கத்துடன், தோலோடு தோல் உரசினால் மட்டுமே, அவ்வாறு கருத முடியும் என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம் வழக்கு தொடுக்க இருக்கிறது.
சமீபத்தில், போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கண்டேவாலா இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே போதும் – உச்ச நீதிமன்றம்
கொய்யா பழம் தருவதாக கூறி, குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஒருவர், தன் ஆடைகளை களைந்ததாகவும், மார்பகத்தை அழுத்தியதாகவும், அந்த குழந்தை தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேல் ஆடையை கழற்றாமல், குழந்தையின் மார்பகத்தை தொடுவது, போக்சோ சட்டத்தின் பிரிவு 7ன் படி குற்றமா என்பது குறித்து ஆராய்ந்ததுள்ளனர்.
போக்சோ சட்டம் குறித்து மும்பை நீதிமன்றம் வினோத விளக்கம் – தண்டனை பெற்றவர் விடுதலை
போக்சோ சட்டத்தின் பிரிவு 7ல், குழந்தையின் அந்தரங்க பாகங்களை தொடுவது அல்லது, ஒருவர் குழந்தையை தன்னுடைய அந்தரங்க பாகங்களைத் தொடச் செய்வது அல்லது பாலியல் நோக்கத்துடன், உடல்ரீதியான தொடர்பை ஏற்படுத்துவது, பாலியல் தாக்குதல் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு
இந்த வழக்கில், “அந்த நபர் மேலாடையை கழற்றி கையை வைத்தாரா, அல்லது கையை ஆடைக்குள் விட்டு, மார்பகத்தை அழுத்தினாரா என்பது தொடர்பாக குறிப்பான தகவல் இல்லாமல், இதை பாலியல் தாக்குதல் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆகவே, போக்சோ சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்த நீதிபதி புஷ்பா கண்டேவாலா, பலவந்தமாக, பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டதாக, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354ன் படி அவருக்கு தண்டனையை உறுதி செய்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@NCWIndia is going to challenge the Hon’ble Bombay High Court, Nagpur Bench judgement in Criminal Appeal No.161 of 2020, Satish Ragde v. State of Maharashtra dated 19.01.2021. The judgment will not only have cascading effect on various provisions involving safety and security
— NCW (@NCWIndia) January 25, 2021
இந்நிலையில், இந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுக்க இருப்பதாக கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம் “இந்த தீர்ப்பு பெண்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு விதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அனைத்து பெண்களையும் கேலிக்குள்ளாக்குகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள விதிகளையும் அர்த்தமற்றதாக்கியுள்ளது” என்று தேசிய மகளிர் ஆணையம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மாந்திரீக மூடநம்பிக்கையால் தொடரும் துயரம்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமி கொலை
அன்றாடம், சமூகத்தில் நிகழும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பின்னால் உள்ள அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள, அரண்செய் யூடியூப் சேனலை பின் தொடருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.