கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருக்கும் ஷாஹி இத்கா மசூதியில் அபிஷேகம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மதுரா நீதிமன்றத்தில் இந்து மகா சபா மனுத் தாக்கல் செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள 13.37 ஏக்கர் பரப்பிலான நிலம் கிருஷ்ண ஜென்ம பூமியென அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் 2.37 ஏக்கர் பகுதியில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்துத்துவவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ண ஜென்ம பூமி தொடர்பாக இந்து மகா சபாவின் பொருளாளர் தினேஷ் சர்மா மதுரா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மதுராவில் ஷாஹி இத்கா மசூதி அமைந்திருக்கும் பகுதியானது இந்துக்களின் கடவுளான பகவான் கிருஷ்ணர் பிறந்த இடமாகும். எனவே அந்த மசூதியில் தூய்மை செய்யும் அபிஷேகத்தை செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, ஜூலை 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரா ஷாஹி இத்கா மசூதியை அகற்ற கோரும் மனு: விசாரணைக்கு எடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் முடிவு
இதுகுறித்து தினேஷ் சர்மா கூறுகையில், “ஒருகாலத்தில் இந்துக் கோயில்கள் வாள் முனையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அபகரிக்கப்பட்டன. இவ்வாறு அபகரிக்கப்பட்ட எங்களின் பாரம்பரியக் கோயில்களை தற்போது நாங்கள் மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளோம். கிருஷ்ண ஜென்ம பூமியில் இருக்கும் மசூதியை அப்புறப்படுத்தி, இந்துக்களின் சுய மரியாதையை மீண்டும் நிலைநிறுத்துவதே எங்கள் குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 2.37 ஏக்கர் ஷாஹி இத்கா மசூதி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி மதுரா சிவில் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ண விரஜ்மான் என்பவர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் மே 26-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Source : The New Indian Express
Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.