Aran Sei

உ.பி: 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

Credits : The News Minute

த்தரபிரதேச சிறையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வழக்கு – பிணை கிடைத்தும் சிறைக் கதவு திறக்காத அவலம்

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் கப்பன் 2020 அக்டோபர் 5-ம் தேதி ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்றார். ஆனால், அவரை உத்தரபிரதேச காவல்துறையினர் மதுராவில் வைத்து கைது செய்தனர்.

கப்பனுடன் சேர்த்து அவருடன் வந்த ரல்ப் ஷெரிப், அதிஹுர் ரஹ்மான், மசூத் அகமது, முகமது ஆலம், அப்துல் ரசாக், அஷ்ரப் காதீர் ஆகியோரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்தனர்.

பத்திரிக்கையாளர் கப்பன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் (தடைசெய்யப்பட்ட அமைப்பு) மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், ஹத்ராஸ் விவகாரத்தை மத ரீதியில் கொண்டு செல்ல திட்டமிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எனது தந்தையின் சுதந்திரத்தை உடைத்துவிட்டார்கள் – சுதந்திர தின விழாவில் பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள் உருக்கமான உரை

இதனிடையே, கப்பன் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, இந்த விவகாரத்தில் பணமோசடி தொடர்பாகவும் அமலாக்கத்துறையும் கப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பல மாதங்கள் சிறையிலிருந்த சித்திக்கிற்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சித்திக்கிற்கு பிணை கிடைக்காததால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வகுப்பு வாதத்தை தூண்டியதாக பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மீது குற்றச்சாட்டு – குற்றப்பத்திரிகை தக்கல் செய்த காவல்துறை

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக சிறையிலிருந்த சித்திக்கிற்கு அமலாக்கத்துறை பதித்த பணமோசடி வழக்கில் லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இதையடுத்து, அனைத்து வழக்கிலும் ஜாமின் கிடைத்ததால் 2 ஆண்டுகளாக சிறையிலிருந்த சித்திக் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : NDTV

ஆட்டுக்குட்டியின் ரபேல் வாட்ச்க்கு அதிபரின் முரட்டு முட்டு | Aransei Roast | Seeman | Annamalai

உ.பி: 2 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்