பீகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாளந்தாவை சேர்ந்த அகிலேஷ் குமார் தாக்கல் செய்த மனுவில், ‘பீகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பு சமத்துவ உரிமைக்கும், அரசமைப்பு சட்டத்திற்கும் எதிராக உள்ளதால் அதை அனுமதிக்கக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த மனுக்கள் விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதித்தால் இடஒதுக்கீட்டை எப்படி தீர்மானிக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பி, இந்த பொதுநல மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என உத்தரவிட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் பாட்னா உயர்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்திய அவர்கள், மனுக்களை திரும்பபெற அனுமதியளித்து வழக்கை முடித்துவைத்தனர்.
விமான கதவில் விளையாட்டா? | வசமாக சிக்கியஆட்டுக்குட்டி | Aransei Roast | Annamalaibjp | tejasvi surya
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.