இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்குவதற்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதலே மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. சட்ட விதிகளை கடுமையாக்கி கடந்த 2019-ம் ஆண்டில் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும்.
இந்த சூழலில் மத மாற்ற தடை சட்டத்தில் மேலும் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டு புதிய சட்ட திருத்த மசோதா இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் கட்டாய மதமாற்றத்துக்கு காரணமானவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஒரே நேரத்தில் 2 பேருக்கு மேற்பட்டோர் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டால் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். மத மாற்றம் தொடர்பான புகார்களை உதவிஆய்வாளர் மற்றும் அதற்கு மேல்நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும். செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற வேண்டும் என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: The Hindu
தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்கள் | ஜெயிலில் தள்ளிய ஆர்.எஸ்.எஸ் | Aadhavan Dheetchanya | RSS | BJP | Modi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.