Aran Sei

ஹிஜாப் விவகாரம்: கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறையளித்து கர்நாடக அரசு உத்தரவு

ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

ஹிஜாப் விவகாரம்: பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றிய வலதுசாரிகள் – வன்முறை; ஊரடங்கு

இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமைக்கு எதிராக கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு தரப்பினர் ஹிஜாப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஹிஜாபுக்கு ஆதரவாக இருக்கும் மாணவர்கள் நீல நிற துண்டோடு ஜெய்பீம் என்கிற முழக்கத்தை முன்வைத்து வருகிறார்கள்.  ஹிஜாபுக்கு எதிரானவர்கள் காவிநிற துண்டணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற முழக்கத்தை எழுப்பியுள்ளனர். .

புர்கா அணிந்து வந்த மாணவி ஒருவரைச் சுற்றி, காவித் துண்டு அணிந்த மாணவர் கூட்டம் ஒன்று ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய சம்பவமும் வீடியோ வடிவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. மேலும், ஷிமோகா நகரில் கல்லூரி ஒன்றில் தேசியக் கொடி இருக்கும் இடத்தில் காவிக் கொடியை சில மாணவர்கள் ஏற்றியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

‘மோடியின் ஆட்சியில் சீரழிந்த ஜனநாயகம்’ – கல்வியாளர் பிரதாப் பானு மேத்தாவோடு ஓர் உரையாடல்

இதனால், சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில்தான், கர்நாடகாவில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், “மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மோடி ஆட்சியில் மக்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் தேசத் துரோக சட்டம் – அபிஷேக் ஹரி

அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹிஜாப் விவகாரம்: கல்லூரிகளுக்கு மூன்று நாள் விடுமுறையளித்து கர்நாடக அரசு உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்