திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வதை பாலியல் வல்லுறவு குற்றமாக்கக் கோரிய மனுக்களின் மீது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை இன்று (மே 11) வழங்கியுள்ளனர்.
நீதிபதி ராஜீவ் ஷக்தேர் திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது தண்டிக்கப்பட வேண்டிய பாலியல் வன்கொடுமை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதி ஹரி சங்கர் இதற்கு மாறாக ஒரு ஆண் தனது 18 வயதிற்கு மேற்பட்ட மனைவியுடன் அவளது அனுமதியின்றி உடலுறவு மேற்கொண்டால் அது பாலியல் வல்லுறவு குற்றமாகாது என இந்தியத் தண்டனை சட்டப்பிரிவு 375 இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள விலக்கு செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் என்று மனுதாரராகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆர்ஐடி ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வந்துள்ளது. இந்தியப் பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் கணவருக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்யுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
கணவனாகவே இருந்தாலும் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்வது குற்றம்தான் – கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை பாலியல் வல்லுறவு குற்றமா இல்லையா என்பதை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசித்த பின்னரே ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்ற என்று கூறும் ஒன்றிய அரசின் முடிவை ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
2022 மார்ச் மாதம், கணவனாகவே இருந்தாலும் தனது மனைவியை பாலியல் வல்லுறவு செய்வது குற்றம் தான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : The Wire
Shawarma Ban ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது Dr Kantharaj Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.