Aran Sei

விவாகரத்து பெறாமல் வேறு ஒருவருடன் வாழும் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

திருமணமான ஒரு பெண், கணவரை விவாகரத்து செய்யாமல், வேறு ஒரு நபருடன் வாழ்ந்தால், நீதிமன்றத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என்று அலகபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அலகாபாத்தில், ஆஷாதேவி என்ற பெண், மகேஷ் சந்திரா என்பவரை சட்டப்படி மணம் முடிந்துள்ளார். அவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாமல், சூரஜ்குமார் என்ற நபருடன் வாழ்ந்துவந்துள்ளார்.

ஜீவனாம்சம் வழங்குவது குறித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

இவர்களின் இந்த உறவு குறித்த புகார் எழுந்த நிலையில், இருவரும் இணைந்து, “நாங்கள் இருவரும் 18 வயதைத் தாண்டியவர்கள். ஆகவே, எங்கள் உறவில் தலையிடக் கூடாது” எனக்கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் “ஆஷாதேவிக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. தன் கணவனிடமிருந்து, அவர் விவாகரத்தும் பெறவில்லை. அப்படியிருக்கும்போது அவர் இன்னொரு உறவில் இருப்பது தவறு. இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கூடாது” என்று வாதிட்டுள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. கேசர்வானி, நீதிபதி ஒய்.கே. ஸ்ரீவஸ்தவா அடங்கிய அமர்வு “ஐ.பி.சி. 494 (கணவன் அல்லது மனைவியின் வாழ்நாளில் மீண்டும் திருமணம் செய்துகொள்வது) / 495 (முந்தைய திருமணத்தை ஒப்பந்தம் செய்த நபரிடமிருந்து முன்னாள் திருமணத்தை மறைத்து வைத்திருப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ், ஆஷா தேவி மற்றும் சூரஜ்குமாரின் செயல் குற்றம்தான்” எனத்  தெரிவித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.
ஆஷா தேவி – சூர்யகுமார் உறவு “திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல்” (Live-in Relationship) என்ற கோட்பாட்டின் கீழும் வரவில்லை, திருமண உறவின் கீழும் வரவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஷாதேவி – சூர்யகுமார் தரப்பில் கோரப்படும் `வேறு யாரும் தலையிடக்கூடாது’ என்பது தொடர்பான சட்டபூர்வமான ஆணையை நிறைவேற்ற, அவர்கள் பக்கம் (மனுதாரருக்கு) சட்ட ரீதியான பலம் இருக்க வேண்டும். ஆனால் இந்த உறவு சட்டத்துக்கு உட்பட்டு வரவில்லை என்பதால், “மனுதாரர்கள் கேட்கும் பாதுகாப்பை நீதித்துறை ரீதியாக அமல்படுத்த முடியாது” எனக்கூறி அலகாபாத் நீதிமன்றம், மனுவை தள்ளபடி செய்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
விவாகரத்து பெறாமல் வேறு ஒருவருடன் வாழும் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்