மகாராஷ்டிரா முதலமைச்சர் வீட்டின் முன்பாக அனுமன் சாலிசா பாடுவோம் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் நவ்நீத் கவுர் ராணா மற்றும் அவரது கணவர் சட்டமன்ற உறுப்பினர் ரவி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அனுமன் சாலிசா மந்திரங்களை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் வீட்டின் முன்பாக ஒலிபெருக்கிகள் வைத்து ஒலிக்க விடுவோம் என கூறிய சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் நவ்நீத் கவுர் ராணா மற்றும் அவரது கணவரான சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ரவியை மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
இதற்கிடையில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும் தங்களை கைது செய்ய வந்த பொழுது அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை இன்று விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இம்மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட தனி நபருடைய வீட்டின் முன்பாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மந்திரங்களை பாடுவோம் எனக்கூறுவது அந்த தனி நபருடைய அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் மேற்கொள்ளும் பொழுது அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம் என மாநில அரசு கருதி அதன் மீது நடவடிக்கை எடுப்பது என்பது நியாயமான விஷயம்தான் என மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்ற பொறுப்புகளை வகிப்போர் அதற்கேற்றார்போல பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மும்பை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
Source : Hindustantimes
overnor RN Ravi க்கு எதிராக கர்ஜித்த Tamilnadu Assembly
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.