சாலை, வடிகால், கால்வாய் சரியில்லை என யாரும் பேசக்கூடாது, ‘லவ் ஜிகாத்’ பற்றியே அனைவரும் விவாதிக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நளின்குமார் கட்டீல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில பாஜக தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நளின்குமார் கட்டீல் தலைமையில் மங்களூருவில் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய நளின்குமார் கட்டீல், “தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. வரும் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும்.
பாஜகவின் கொடி பறக்க வேண்டிய நேரம் இது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு உள்ளது. அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சித்தராமையாவின் ஏஜெண்டாக கெம்பண்ணா செயல்படுகிறாா். 40 சதவீத கமிஷன் குறித்து ஆதாரம் இருந்தால் லோக் அயுக்தாவிடம் கொடுக்க வேண்டும். இந்துக்களை வெறுக்கும் காங்கிரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இனிமேல் மாநிலத்தில் சாலை, வடிகால், கால்வாய் சரியில்லை என யாரும் பேசக்கூடாது. ‘லவ் ஜிகாத்’ பற்றி மட்டுமே அனைவரும் விவாதிக்க வேண்டும். மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடுப்பு சட்டம் போல, ‘லவ் ஜிகாத்’ தடுப்பு சட்டமும் கொண்டுவரப்படும் என்று அவர் பேசியுள்ளார். நளின்குமார் கட்டீலின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Source : the wire
ஆட்டுக்குட்டியின் குரங்கு காமெடி | வைச்சி செஞ்ச பத்திரிகையாளர்கள் | Aransei Roast | Annamalai | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.