டூல்கிட் வழக்கில் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருக்கும் 22 வயதான சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவிக்கு, ஒரு நாள் போலிஸ் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தீஷா ரவிக்கு வழங்கப்பட்டிருந்த 3 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் (பிப்ரவரி 22) முடிவடைந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சேர்த்து தீஷா ரவியை விசாரிக்க வேண்டும் என டெல்லி காவல்துறை கோரியதையடுத்து, தீஷா ரவிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி, நீதிபதி பங்கஜ் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் முன்ஜாமின் பெற்றிருக்கும் நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகியோரை பிப்ரவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், துவாரகாவில் இருக்கும் டெல்லி காவல்துறை சைபர் பிரிவு அலுவலகத்தில் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் (விவர ஆவணம்) ஒன்றை, ஸ்வீடனை சேர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர் கிரெட்டா தன்பர்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்த அவர் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த டூல்கிட்-ஐ பயன்படுத்தினார் என்ற அடிப்படையில் தீஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனுவிடம் டெல்லி காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.