சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி தந்துள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் தடை விதித்தனர்.
இதன் பிறகு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் அனுமதிக்க வழங்கக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் கோயிலில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்ற வாதங்களும் நடைபெற்றது.
பாரம்பரியத்தை கைவிடாத மடாதிபதிகளுக்கு ஏ/சி அறை எதற்கு? – பழ. நெடுமாறன் கேள்வி
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி “சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.என்.ராதா என்பவரால் தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கொரோனா நோய்த்தொற்றின் தற்போதைய நிலை மற்றும் கோயில் நிர்வாகத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்” என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் “கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் சபாநாயகரை தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்படுகிறது” என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : puthiyathalaimurai
காசி ஆனந்தனின் தியாகத்தை கொச்சை படுத்த முடியாது | Thiruma Speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.