உலகிலேயே ராணுவத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் உலகளாவிய பாதுகாப்புச் செலவினம் 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்றும், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக உலகில் மூன்றாவதாக அதிக இராணுவச் செலவு செய்யும் நாடு இந்தியாவாகும் என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
‘இமாச்சல பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளோம்’ – முதலமைச்சர் ஜெய் ராம்
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, அமெரிக்கா, சீனா, இந்தியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ரஷ்யா ஆகிய முதல் ஐந்து நாடுகளின் இராணுவ செலவினங்கள், உலகளாவிய இராணுவ செலவினத்தில் 62 சதவீதத்தைக் கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும், உலக இராணுவ தங்களின் ராணுவ செலவுகளை அதிகரித்துள்ளன என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் இராணுவச் செலவு மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டியாகோ லோப்ஸ் டா சில்வா கூறியுள்ளார்.
2020ல் இருந்து 0.9 சதவீதம் அளவுக்கு இந்தியாவின் ராணுவ செலவு அதிகரித்து 2021ல் 76.6 பில்லியன் டாலர்களாக உள்ளதாகவும், இது 2012 ஆம் ஆண்டைவிட 33 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. “சீனா மற்றும் பாகிஸ்தானுடனான தற்போதைய பதட்டங்கள் மற்றும் எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா தற்போது அதன் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளது” என்றும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக இராணுவச் செலவில் அமெரிக்கா 38 சதவீதத்தையும், சீனா சுமார் 14 சதவீதத்தையும் கொண்டுள்ளது. சீனாவின் இராணுவச் செலவு தொடர்ந்து 27வது ஆண்டாக வளர்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதேபோல், ரஷ்யாவும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தனது இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020 உடன் ஒப்பிடும்போது 4.7 சதவீதம் அதிகரித்து 293 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்புக்காக செலவிட்ட சீனாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ராணுவச் செலவு கடந்த ஆண்டு 76.6 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, இது 2020 உடன் ஒப்பிடும்போது 0.9 சதவீதம் அதிகமாகும் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Dalit Youth Vignesh Issue | மிச்சமிருக்கும் இன்னொரு உயிரையேனும் கப்பாற்றுங்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.