Aran Sei

கர்நாடகாவில் தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – ஹிஜாபுடன் வந்தால் தேர்வு எழுத முடியாது என அரசு அறிவிப்பு

ர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாநிலத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.

கர்நாடகா முழுவதும் 3,444 மையங்களில் சுமார் 8.73 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ளனர்.

‘ஹிஜாப் அணிந்த மாணவர்கள் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது’ – கர்நாடக அரசு அறிவிப்பு

“கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவர்கள் 10 வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் தங்களது தவறை உணர்ந்து ஹிஜாப் அணியாமல் வந்தால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் என்டிடிவியிடம் தெரிவித்திருந்தார்.

“ஹிஜாப் அணிந்து வரும் மாணவர்களுக்கு எந்தவிதமான விதிவிலக்குகளும், சலுகைகளும் வழங்கப்படாது. ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அனைவரும் பின்பற்றித் தேர்வெழுத வேண்டும்” என்று அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார்.

ஹிஜாப் தடையால் தேர்வு எழுதாத மாணவர்கள் – மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு அறிவிப்பு

வகுப்பறைக்குள் மத ரீதியிலான உடைகளை அணிந்து வரக் கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையின்போது தேர்வுகளைத் தவறவிட்ட இஸ்லாமிய மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பல இஸ்லாமிய மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து வருகின்றனர்.

ஹிஜாப் அணிந்ததால் சக மாணவர்கள் என்னை தனிமைப்படுத்தினர் – கராத்தே சாம்பியன் அலியா அசாதி வேதனை

கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹிஜாப் வழக்கிற்கும், பள்ளி, கல்லூரி தேர்வுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆகவே இந்த விவகாரத்தைப் பரபரப்பாக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Source : NDTV

கர்நாடகாவில் தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – ஹிஜாபுடன் வந்தால் தேர்வு எழுத முடியாது என அரசு அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்