ஜம்மு காஷ்மீரின் புறநகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது, இது மின்னல் தாக்குதல் அல்லது விண்கல் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிஷ்னான் பெல்ட் பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இது ஒரு விண்கல் என்று சந்தேகிக்கிறோம் அல்லது மின்னலாக கூட இருக்கலாம் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசத்தின் இரு பிராந்தியங்களுக்கும் அனைத்து காலநிலையில் இணைப்பில் இருக்க ஏதுவாக கட்டப்பட்ட பானிஹால்-காஜிகுண்ட் சாலை சுரங்கப்பாதை திறப்பு விழா மற்றும் ஜம்மு காஷ்மீரில் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களின் அடிக்கல் நாட்டுவதற்கான பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு வருகை புரிவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.